Sunday, November 7, 2010

138: வல்வெட்டித் துறை படுகொலை!,139: வி.ஆர்.கிருஷ்ணய்யரின் குற்றச்சாட்டு!

138: வல்வெட்டித் துறை படுகொலை!  இந்திய அமைதிப் படையின் செயல்பாடுகளில் கடும் கண்டனத்துக்கு ஆளான சம்பவம்
      வல்வெட்டித் துறைப் படுகொலை ஆகும். இந்தப் படுகொலை நிகழ்ச்சிகளை, இந்திய
      சுதந்திரப் போராட்டத்தின் போது நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் சம்பவத்துடனும்,
      அமெரிக்காவின் வியட்நாம் போர்க் காலத்தில் நடைபெற்ற மயிலாய் சம்பவத்துடனும்
      உலகப் பத்திரிகைகள் ஒப்பீடு செய்கின்றன. பல நூற்றுக்கணக்கானோர் படுகொலை
      செய்யப்படவும், 123 வீடுகள் அடியோடு நாசமாக்கப்படவும், 45 கடைகள் எரித்து
      சாம்பலாக்கப்படவும், 62 வாகனங்கள், 12 மீன்பிடிப் படகுகள், 176 மீன்பிடி
      வலைகள் எரிக்கப்படவும், தங்க நகைகள், பெருந்தொகையான பணம், மின்னணுப்
      பொருள்களை அப்பகுதி மக்கள் இழக்கவும் காரணமான சம்பவத்தின் ஆரம்பம் என்பது
      வல்வெட்டித்துறை சந்தைப் பகுதியில் புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் நடந்த
      மோதல்தான். இந்த மோதல் காரணமாக அமைதிப் படையைச் சேர்ந்த 6 படைவீரர்கள்
      இறந்தனர். 11 பேர் காயமுற்றனர். இதனால் கொதிப்புற்ற, வல்வெட்டித்துறையைச்
      சுற்றியிருந்த மூன்று முகாம்களிலும் முடங்கியிருந்த ராணுவத்தினர்,
      வல்வெட்டித் துறையைச் சுற்றி வளைத்துக் கொண்டனர். அந்தப் பகுதியில் 3 நாட்கள்
      ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக ஊரில் உள்ள ஆண்களும்,
      பெண்களும் வீட்டினுள்ளேயே முடங்கிக் கிடந்தனர். சிலர் மினி தியேட்டரில் படம்
      பார்த்துக் கொண்டிருந்தனர். இவ்வாறு ஊரடங்கு காரணமாக வீட்டிலும், மற்ற
      இடங்களிலும் முடங்கிக் கிடந்தவர்களை வீட்டினுள் புகுந்தும், அவர்களை வெளியே
      இழுத்து வந்து போட்டும், சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட பின்னர், அவர்கள்
      சுட்டுக் கொல்லப்பட்டனர். காயம்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க அங்கு
      முகாமிட்டிருந்த பிரான்ஸ் நாட்டு மருத்துவக் குழுவினருக்கு அனுமதி
      மறுக்கப்பட்டது. ஊர்ச் சந்திப்பில், பொது இடங்களில் கும்பல், கும்பலாக
      சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் சிதறிக் கிடக்க, அவர்களது உடல்கள் மீது பெட்ரோல்
      ஊற்றி எரிக்கப்பட்டது.
      இந்தச் சம்பவம், "அமைதிப் படைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நடைபெற்ற
      மோதலில் எதிர்பாராதவிதமாக பொதுமக்கள் 24 பேர் கொல்லப்பட்டனர்; புலிகளின்
      தாக்குதல் விளைவாக வீடுகளும், கடைகளும் சேதமடைந்தன. மோதலில் 6 விடுதலைப்
      புலிகள் கொல்லப்பட்டனர்' என்று இந்திய வானொலியிலும், தொலைக்காட்சியிலும்
      செய்தி ஒலி, ஒளி பரப்பானதுடன் முடித்துக் கொள்ளப்பட்டது. ஆனால் இச் சம்பவம்
      பூதாகரமான நிகழ்ச்சியாக மாறியது எப்போது என்றால் இந்தப் படுகொலைகளும்,
      சேதங்களும் குறித்து லண்டன் நாளிதழான "த சன்டே டெலிகிராப்' 13.8.1989-இல்
      அதன் தில்லி நிருபர் ஜெரிமி காவ்ரன் மற்றும் லண்டன் வெளியீடான "ஃபைனான்ஸியல்
      டைம்ஸி'ன் தில்லி நிருபர் டேவிட் ஹவுஸ்கோ, இந்தியப் பத்திரிகையான "த
      ஸ்டேட்ஸ்மன்' (18-8-1989) நாளிதழ்களில் தலையங்கம் மற்றும் செய்திகள்
      வெளியிட்டதன் காரணமாகவே வெளியுலகுக்குத் தெரியவந்தன. இந்தியன் எக்ஸ்பிரஸ்
      (24.8.1989) தலையங்கம் தவிர, அதன் கொழும்பு நிருபர் ரீட்டா செபஸ்தியான்
      அரைப்பக்க அளவில் மிகப்பெரிய செய்திக் கட்டுரை ஒன்றினை ‘ஐடஓஊ
      ஹற்ழ்ர்ஸ்ரீண்ற்ண்ங்ள் ர்ய் ஸ்ரீண்ஸ்ண்ப்ண்ஹய்ள்: ஙஹள்ள்ஹஸ்ரீழ்ங் ஹற்
      டர்ண்ய்ற் டங்க்ழ்ர் என்ற தலைப்பில் வெளியிட்டு அதிர்ச்சியூட்டியிருந்தார்.
      ஹிந்து நாளிதழ் (2.8.1989) இந்தச் செய்தியை ஆறே வரிகளில் புலிகள் -அமைதிப்
      படை மோதலில் 23 பேர் மரணம் என்று தெரிவித்தது. அதே பத்திரிகையின் தில்லி
      நிருபர் கே.கே. கட்டியால் 12.8.1989 தேதியிட்ட செய்தியில், மோதலின்போது
      புலிகள் மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தினர் என்று செய்தி
      வெளியிட்டார். ஹிந்து நிறுவனத்தின் துணைப் பத்திரிகையான ஃப்ரண்ட்லைனில் (ஆக.
      19-செப்.1, 1989) ஈரோஸ் இயக்கத் தலைவர் வி. பாலகுமார் கூறியதாக வந்த
      செய்தியில், மோதலில் பொதுமக்கள் 70 பேருக்கு மேல் இறந்ததாகவும்,
      ஆயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக்கப்பட்டதாகவும், அங்கு நேரில் சென்று
      பார்த்தபோது அந்த நிகழ்ச்சி படுபயங்கரமாக இருந்ததாக அவர் தெரிவித்ததாகவும்,
      அதன் செய்தியாளர் டி.எஸ். சுப்ரமணியன் வெளியிட்டிருந்தார். மேற்கண்ட
      செய்திகளின் நறுக்குகள் (ஸ்ரீன்ற்ற்ண்ய்ஞ்ள்) மூலம் அந்தந்தப் பத்திரிகைகளின்
      பார்வைகள் வெளியாகின்றன. ஆனால், அச் செய்திகளின் மூலம் தெரியவருவது
      என்னவென்றால், உண்மைகளை அவர்களால் மறைக்க முடியவில்லை என்பதுதான்.
      இந்த நிகழ்வுகளின்போது நடந்த, தாக்குதலில் மக்கள் நலன் புரியும் குழுவின்
      செயலாளராக இருந்து வந்த ஆனந்தராஜாவும் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்.
      அவரைக் குற்றுயிரும், குலையுயிருமாகக் கொண்டுவந்து மருத்துவமனையில்
      போடப்பட்டபின்னர், அமைதிப் படைத் தளபதிகளான பிரிகேடியர் சங்கர் பிரசாத்,
      கர்னல் அவுஜியா, கர்னல் சர்மா மற்றும் டாக்டர் கேப்டன் சவுத்ரி முதலானோர்
      அவரை நன்கு அறிந்திருந்த நிலையிலும், ஒப்புக்கு மட்டுமே அனுதாபம் தெரிவித்து
      விசாரித்தனர். முடிவில் அவர்கள் ஒவ்வொருவரும், ""விடுதலைப் புலிகளின் ஆயுதக்
      கிடங்கு மற்றும் அவர்கள் ஒளிந்திருக்கும் இடங்களைக் காட்டுங்கள். நீங்கள்
      இதற்காகப் பயப்பட வேண்டாம், உங்கள் முகத்தில் கருப்புத் துணி போர்த்திதான்
      நாங்கள் அழைத்துச் செல்வோம், அதன்பின்னர் நீங்களும், உங்கள் குடும்பமும்
      இந்தியாவுக்குக் கொண்டு செல்லப்படுவீர்கள். உங்கள் பாதுகாப்புக்கு நாங்கள்
      உறுதி தருகிறோம்'' என்று வற்புறுத்தியும் அவர் மசியவில்லை. பின்னர் மறுநாள்
      மயக்கம் தெளிந்ததும் "காங்கேயன்துறை முகாமுக்குப் போவதைத் தவிர்க்க
      விரும்பினால் உண்மைகளைச் சொல்லி விடுங்கள்' என்று மிரட்டினர். (காங்கேயன்துறை
      முகாம் என்பது கொடிய சித்ரவதை முகாம் ஆகும்.) அப்படியும் அவர்
      பதிலளிக்கவில்லை. இதனிடையே அவர் மருத்துவமனையை விட்டு வெளியே வந்ததும்,
      இலங்கையின் இந்தியத் தூதுவர் எல்.எல். மெஹ்ரோத்ராவுக்கு (அதுவரை தூதுவராக
      இருந்த ஜே.என். தீட்சித் விடுவிக்கப்பட்டிருந்தார்) வல்வெட்டித்துறைக்
      கொடுமைகள் குறித்து எழுதி, "இந்த அவலங்களை இந்தியப் பிரதமருக்கு
      தெரியப்படுத்துங்கள். இவ்வகையான சம்பவங்கள் உலகில் எங்குமே நடக்கக் கூடாது
      என்றும் சொல்லுங்கள்' என வற்புறுத்தி எழுதினார் (21.8.1989).
      அதேபோன்ற கடிதம் ஒன்றை, இலங்கை அதிபர் பிரேமதாசாவுக்கும் எழுதினார்.
      தொடர்ந்து அவர் இந்தியாவுக்கு ரகசியமாக வந்து தமிழகத் தலைவர்கள், இந்தியத்
      தலைவர்களைச் சந்தித்து வல்வெட்டித் துறை படுகொலைச் சம்பவத்தை விவரித்தார்.
      இதில் முகம் கொடுத்து ஒத்துழைத்த வட இந்தியத் தலைவர்களில் ஒருவரான ஜார்ஜ்
      பெர்னாண்டஸ் இந்தச் சம்பவத்தை "இந்தியாவின் மயிலாய்' என்று விவரித்து, இந்தக்
      கொடுமைகளை நூல் வடிவில் அதாவது, இந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் தனது
      முன்னுரையுடன் வெளியிட்டார். இதன் பின்னரே இந்தச் சம்பவம் குறித்து, இந்தியா
      மட்டுமன்றி உலகம் முழுவதும் செய்தி பரவி, அமைதிப் படை செயல்பாடுகளுக்குக்
      கண்டனம் தெரிவிக்கப்பட்டது.இதன் பின்னர் இந்தியாவிலும் அமைதிப் படை இலங்கையை
      விட்டு வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. திமுக உள்ளிட்ட கட்சிகள்
      பொய்ச் செய்தி வெளியிடும் தொலைக்காட்சி நிலையச் செய்திகளைக் கண்டித்து "டிவி
      பெட்டி உடைக்கும்' போராட்டத்தை நடத்தினர்.
      139: வி.ஆர்.கிருஷ்ணய்யரின் குற்றச்சாட்டு!         பிரேமதாசாவின் அரசியல் நெருக்கடிகளுக்குப் பதிலாக, விடுதலைப் புலிகளின்
      மீது தாக்குதல் தொடுத்த அமைதிப் படையையும், தமிழ் தேசிய ராணுவத்தையும்
      தாக்குப் பிடிக்க வேண்டுமானால், ஆயுதங்கள் தேவைப்பட்டது. இந்நிலையில்
      பாலசிங்கமும் அமைச்சர் ஹமீதும் நடத்திய பேச்சுவார்த்தையின் தொடர் நிகழ்வாக,
      புலிகளின் தேவைகளுக்கு முல்லைத் தீவு மாவட்ட மணலாறு பகுதியில் உள்ள முகாம்
      வழியாக ஆயுத உதவி வழங்கப்பட்டதாக அடேல் பாலசிங்கம் தனது நூலில்
      குறிப்பிட்டுள்ளார். அமைதிப் படையைத் திரும்பப் பெறுவது தொடர்பாக, பிரேமதாசா
      விடுத்த கெடு நெருங்கி வந்தது. ஆனால் இந்தியா இது குறித்து அமைதியாகவே
      இருந்தது.
      இந்நிலையில் அமைதிப் படை இலங்கையைவிட்டு வெளியேறவேண்டும் என்று
      இந்தியாவிலிருந்தும் குரல்கள் கனத்து ஒலித்தன. இந்தக் குரல்கள்
      உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர், முன்னாள் மேஜர்
      ஜெனரல் கரியப்பா உள்ளிட்டவர்களிடமிருந்தும், பத்திரிகைத் தலையங்கங்கள்
      மூலமாகவும் எழுந்தன. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர்
      கருத்து வருமாறு: கொள்கைப் பிடிப்புள்ள தேசபக்தரான அமிர்தலிங்கம் படுகொலை
      செய்யப்பட்டார். இதற்கு முன்னால் எப்போதும் இருந்திராத அளவுக்கு,
      ஸ்ரீலங்காவுக்கு மிகவும் அவசியமாகத் தேவைப்படுகிற ஒரு தமிழ்த் தலைவனை நாம்
      பறி கொடுத்தோம். இந்த அதிபயங்கரமான வன்முறைச் செயலால் நான் அதிர்ந்து போனேன்.
      அதைவிடவும் அதிபயங்கரமான சோகம் வேறு ஒன்று உண்டு. அமைதிகாக்கும் இந்தியப்
      படைக்கு ஆதரவான குரல்கள், இந்தப் படுகொலையை அரசியல் ஆதாயத்துக்காகப்
      பயன்படுத்திக் கொள்வதுதான். கொழும்புவில் வைத்து அமிர்தலிங்கத்தைப் படுகொலை
      செய்திருப்பதால், இந்திய ராணுவம் யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருக்கவேண்டும்
      என்பது அவர்களுடைய நியாயத்துக்குப் புறம்பான வாதம். அமைதிப் படைக்கு ஆதரவாகச்
      செயல்படும் குழுவினர், கொழும்புவிலுள்ள தமிழ்மக்களின் உயிர்களைக் காப்பதற்காக
      இந்திய ராணுவம், கொழும்புவை நோக்கிப் படையெடுக்கவேண்டும் என்றும்
      கேட்கக்கூடும். அமிர்தலிங்கம் படுகொலை என்பதை ஒரு சாக்காக வைத்து
      இந்தியா-ஸ்ரீலங்கா இடையே ஒரு போர் மூளவேண்டும் என்று அவர்கள்
      விரும்புகிறார்கள் என்று சுருக்கமாகச் சொல்லலாம். அமைதி காக்கும் இந்தியப்
      படையினர் யாழ்ப்பாணத்திலேயே இருக்கவேண்டும் என்கிற கோரிக்கை நியாயமானதாகவும்
      இருக்கலாம்; அல்லது மோசமான சிந்தனையாகவும் இருக்கலாம். ஆனால் கொழும்புவில்
      நடந்த படுகொலைக்கும் அதற்கும் தொடர்பு இல்லை. கடுமையான நீதித்துறை
      நடவடிக்கைகளுக்குக் காத்திராமல், தில்லி தன்னுடைய அமைதிப் படை அணிகளை
      ஐரோப்பாவுக்கு அனுப்பியோ, அல்லது இந்தியாவுக்குள்ளே தேடியலைந்தோ புலிகளைத்
      தேடிப் பிடித்துச் சுட்டுத் தள்ள வேண்டும் என்பதே இதன் பொருள். ஆனால்
      இந்தவிதமான அசட்டுத்தனமான பிரசாரம் இந்தியாவுக்குள்ளேயே செய்யப்படுகிறது.
      இதைப் பரப்புகிறவர்களுக்கே இந்தக் கோரிக்கையில் உள்ள முரண்பாடுகள் நன்கு
      தெரியும்.
      ஆனால் நியாயத்தை ஒதுக்கிவிட்டு, வெறியைத் தூண்டிவிடவே விரும்புகிறார்கள்.
      அதன்மூலம், ஓர் அடிமையான நிர்வாக அமைப்பை உருவாக்குதற்காக அமைதிப் படை
      யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருக்கவேண்டும் என்பதும், அந்த அமைப்பு
      நாளாவட்டத்தில் பனிபோல் மறைந்துபோய்விடும் என்றும், அதைப் பாதுகாப்பது பாக்
      நீரிணைக்கு இப்பால் உள்ள ஜவான்களின் கடமையாக இருக்கவேண்டுமென்றும் அவர்கள்
      விரும்புகிறார்கள். அண்மையில், பிரபலமான ராஜீவ் விசுவாசியும் அமைதிப் படை
      ஆதரவாளருமான ஒருவர், ஸ்ரீலங்கா அரசுக்கே எதிரான முறையில் இந்திய ராணுவம்,
      அங்கேயே பணியாற்றிக்கொண்டிருக்க வேண்டும் என்று கோரியிருக்கிறார். ஏனென்றால்
      அமிர்தலிங்கத்தைப் புலிகள்தான் படுகொலை செய்திருக்கிறார்கள். இப்படி அவர்
      தமக்குத் தாமே நிரூபணமானதாகக் கருதிக்கொண்டு பேசியிருக்கிறார். இப்படி ஒரு
      கூச்சலைக் காலிஸ்தான் பயங்கரவாத ஆதரவாளர்களோ, இந்தியாவுக்கு எதிரான காஷ்மீர்
      தலைவர்களோ, பாகிஸ்தானில் போய் எழுப்பமுடியுமானால், எந்த இந்தியனாவது
      பொறுத்துக்கொண்டு பேசாமலிருக்க முடியுமா? இந்தமாதிரியான தில்லி ராஜதந்திரம்
      இந்தியா-ஸ்ரீலங்கா நல்லுறவை சுமுகமாக மேம்படுத்துமா? ஸ்ரீலங்காவின்
      ஒற்றுமையிலும் உறுதித்தன்மையிலும் இந்தியாவுக்கு ஆழமான அக்கறை உண்டு என்று
      1987 ஜூலை 31-இல் ராஜீவ் காந்தி நாடாளுமன்றத்தில் சொன்னார். அவர்களே வரவழைத்த
      படைகளைத் திரும்ப அனுப்ப, அல்லது வெளியேறச் சொல்லும்போது அப்படிச் செய்ய
      மறுப்பதும் நம்பிக்கைத் துரோகமான செயலாகும். புலிகளின் பங்களிப்பு இல்லாமல்
      இந்த இனப் பிரச்னையைத் தீர்த்துவைக்க முடியாது. மக்களிடம் அவர்களுக்குள்ள
      பரவலான செல்வாக்குக்கும் மதிப்பளிக்கவேண்டும். 1983-இல் படுமோசமான படுகொலைகள்
      நடந்தபோது சிங்களக் காட்டுமிராண்டிகளை அதிவீரத்தோடு எதிர்த்துப்
      போரிட்டவர்கள் அவர்கள். இந்த இடத்தில், யாழ்ப்பாணத்தில் இந்தியா
      செய்யவேண்டியதென்ன என்பது பற்றி இன்னும் இரண்டு விஷயங்களைக் குறிப்பிட
      விரும்புகிறேன்.
      தமிழ்ப் பகுதியில் உள்ள மக்களுக்கு அதிகாரம் வழங்குவது சம்பந்தமாக,
      இந்தியாவையும் மற்ற உலகநாடுகளையும் ஜனாதிபதி ஜெயவர்த்தனா ஏமாற்றுகிறார் என்று
      அமிர்தலிங்கத்துக்கு அதிருப்தி. யதார்த்தமான சட்டமன்ற அதிகாரத்தை மாற்றி
      வழங்குவது பற்றிக் கொழும்புவை தில்லி நிர்ப்பந்திக்கவில்லை என்றும் அவருக்கு
      வருத்தம். 1987 ஜூலை முதல், ஜெயவர்த்தனா பதவி துறக்கும் வரையில் இதுதான்
      நிலவரம். தமிழர்களுக்குச் சுய ஆட்சி உரிமை அல்லது ஒதுக்கிவிடமுடியாத அதிகார
      மாற்றம் -இவை பற்றி ஒருமுறைகூட ராஜீவ் காந்தி வலியுறுத்தியதில்லை. இதே
      பெருமாளும் அவருக்கு முன்னால் அவருடைய கட்சிச் செயலாளர் பத்மநாபாவும்,
      ஜனாதிபதி ஜெயவர்த்தனா தம்முடைய வாக்குறுதிகளை நிறைவேற்றாதது பற்றி
      தில்லியிலுள்ளவர்களிடம் பலமுறை முறையிட்டும் அது செவிடன் காதில் ஊதிய
      சங்காகிவிட்டது. "ஆபரேஷன் பவன்' திட்டத்தின்படி, டெல்லித் தலைமையிடம்
      காடுகளில் உள்ள புலிகளைத் தேடிச் சரண் அடையவைக்கும் முயற்சியில் ஆட்களை
      வேட்டையாடும் காரியமாகவே நடைபெற்றது. இதே நேரத்தில் எண்ணிக்கையில் அடங்காத
      தமிழர்கள் செத்தார்கள். தெரிவிக்கப்பட்டதை விடவும் அதிக எண்ணிக்கையில்
      ஜவான்களும் உயிரிழந்தார்கள். அறிவிக்கப்படாத யாழ் போரில், இறந்தவர்களின்
      எண்ணிக்கை பற்றிய உண்மையே காவு கொடுக்கப்பட்டுவிட்டது. இதுதான் பலன்.
      ஸ்ரீலங்காவைப் பற்றி தில்லி தருகிற தகவல்கள் மட்டுமே நம்மிடம் உள்ளன.
      வெளிப்படுத்தப்படுகிற கருத்தின் விளைவாகவே பெரிய எதிர்ப்புகள் நிகழ்கின்றன.
      சமீபகாலம் வரை பத்திரிகைச் செய்திகளில் மிகவும் குறைவான கவனத்தையே அமைதிப்படை
      பெற்றிருந்தது என்பது ஓர் ஆச்சரியம். ஸ்ரீலங்காவில் என்ன நடக்கிறது என்பதைப்
      பற்றி சராசரி இந்தியனுக்கு எதையும் தெரிந்துகொள்ள வழியில்லை. நம்முடைய
      நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இதே நிலைதான். அதிகாரபூர்வமானதாகத் தரப்படும்
      செய்திகள் மட்டும்தான். முன்னாள் இந்திய ஹைகமிஷனரை "இந்தியாவின் வைசிராய்'
      என்பதாகக்கூட இலங்கையர்கள் குறிப்பிடுவதாகச் சொன்னார்.
      நியூயார்க்கில் நடைபெற்ற ஒரு தமிழ் மாநாட்டில் நான் உடனிருக்க, சுப்ரமணியம்
      சுவாமியிடம் இந்திய ராணுவத்தினரின் அட்டூழியங்களைப் பற்றி விசாரிக்க ஒரு
      கமிஷன் ஏற்படுத்தவேண்டும் என்றுகூடக் கோரிக்கை வைத்தார்கள். சென்ற ஆண்டு
      லண்டன் மகாநாட்டில் என்னிடம், இந்த ராணுவ ஆக்கிரமிப்புக் கொடுமையைப் பற்றிக்
      கண்ணால் கண்டவர்களின் சாட்சியங்களும் அஃபிடவிட்டுகளும் தரப்பட்டன. ஹைகமிஷன்
      தருகிற செய்தியறிக்கைகளை வெறுமனே கேட்டுக்கொண்டிருக்காமல், எல்லாவற்றையும்
      தெரிந்துகொள்ளக்கூடிய உரிமை நமக்கு இருக்கிறது. யாழ்ப்பாணம் உயர்நிலைப்பள்ளி
      ஒன்றின் தலைமையாசிரியராக இருந்த கிறிஸ்தவப் பாதிரியார் ஒருவரை நான்
      ஓராண்டுக்கு முன்னால் நியூஜெர்ஸியில் சந்தித்தேன். தமிழ்க்குடிமக்களை,
      பொறுப்பற்ற முறையில் பயங்கரமாகத் துன்புறுத்திய அமைதிப்படையின் செயல்களை,
      அங்கே நடைபெற்ற ஒரு கூட்டத்தில் அவர் விவரித்தார். அவர்கள் புலிகளை விரட்டித்
      தேடியிருக்கலாம். அந்த நடவடிக்கையில் சந்தேகப்பட்டவர்களையெல்லாம் அவர்கள்
      சுட்டிருக்கக்கூடும்.
      அமைதிப் படை என்பது, அவர்களுக்குள்ளேயே சட்டதிட்டங்களை உடைய அமைப்பு என்பது
      உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் விரும்புகிறவரை ஆட்களைக் காவலில்
      வைத்திருக்கலாம். அடித்து உதைக்கலாம். மாஜிஸ்திரேட் முன்னால் கொண்டுபோய்
      நிறுத்தவேண்டிய அவசியமில்லை. நாகரிகமான மக்களாட்சி முறைக்கு
      மேம்பட்டவர்களாகவே அவர்கள் நடந்துகொண்டார்கள். கொழும்பு பாரிஸ்டர் ஒருவர்
      என்னோடு தொலைபேசியில் தொடர்புகொண்டபோது நான் அதிர்ச்சியடைந்தேன். ஹேபியஸ்
      கார்ப்பஸ் -ஆள்கொணர்வு மனுக்களின் மீது உச்சநீதிமன்றமே நோட்டீஸ் அனுப்பியும்,
      அமைதிப்படை தரப்பிலிருந்து எந்தப் பதிலும் கிடையாது என்று அவர் சொன்னார்.
      நம்முடைய வீரர்கள்,காக்கி உடையில் நம்முடைய தூதர்களாக இயங்கவேண்டியவர்கள்,
      சட்டத்துக்கு அடங்காதவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டது. ஸ்ரீலங்காவின்
      உச்சநீதிமன்றம் என்பது அமைதிப்படையினருக்கு வெறும் காகிதப் புலியா?
      தவறான தகவல்களின் அடிப்படையில் இது திரித்துக் கூறப்பட்டதாகவும் இருக்கலாம்.
      அப்படியானால் இதற்கு விடை, இந்தியாவின் முன்னாள் தலைமை நீதிபதிகளைக் கொண்ட
      குழு ஒன்றை அமைத்து விசாரணை செய்வதுதான். அவர்கள் நம்முடைய ஜவான்கள் மீதும்
      அதிகாரிகள் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும். -என்று
      வி.ஆர்.கிருஷ்ணய்யர் தனது கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். (தமிழ் வாய்ஸ்
      இன்டர்நேஷனல்-செப்டம்பர் 1989).

No comments:

Post a Comment